Anbenum Idhazhgal Malarattume! 14*
அணிமா-14
அந்த ஒலிப்பதிவைக் கேட்கவும் மலரின் தூக்கம் மொத்தமும் காணாமல் போனது அடுத்த நொடியே ஜெய்யை கைபேசியில் அழைத்தவள், "ஜெய்! என்னடா நடக்குது என்ன இதெல்லாம்; இப்படி சேலஞ்ச் பண்ணி பேசியிருக்கானே யாரு அவன்?" என்று கேள்விகளாய் அடுக்க,
"பிசியா இருக்கேன் மலர் டைம் கிடைக்கும்போது வீட்டுக்கு வந்து நேரிலேயே சொல்றேன் எங்கேயும் போயிடாதே" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் ஜெய்.
அவள் முகம் கழுவி வரவேற்பறைக்கு வரவும் அங்கே உட்கார்ந்து தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஜீவிதா மலரிடம் தயக்கத்துடன், "ஏன் மலர் உடனே பதில் சொல்லாம எங்க எல்லாரையும் கஷ்ட படுத்தற; எங்க அண்ணா அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க;
அவங்க உன்னைக் கல்யாணம் செய்துக்கணும்னு கேட்டாங்கன்னா அவங்களுக்கு அந்த அளவுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு அர்த்தம்! புரிஞ்சுக்கோ மலரு" என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி முடிக்க, மெல்லிய புன்னகை அரும்பியது மலரின் முகத்தில்.
ஏனோ அவளால் ஜீவிதவை மரியாதையுடன் அண்ணி என்ற இடத்தில் நிறுத்த முடியாமல் ஒரு சிறிய பெண்ணாக மட்டுமே நினைக்க முடிகிறது.
அவள் அக்கறையுடன் வீட்டில் அனைவரின் மனநிலையையும் பிரதிபலிப்பது போல் பேசவும் மனதினில் அவளை மெச்சியவள், "ப்ச் அதைப் பற்றிய பேச்சு இப்ப வேண்டாம்; எனக்கும் கூட உன் மேல் கொஞ்சம் வருத்தம்தான்.
நீ படிச்ச படிப்பை உபயோகமாகப் பயன் படுத்தாம இப்படி வீணாக்குவது எனக்கு முதலில் இருந்தே பிடிக்கல.
நானே உன்னை ஏதாவது யூஸ்ஃபுல்லா செய்ய சொல்லணும்னு நினைச்சேன். நீ இப்ப கன்ஸீவா இருக்கறதுனால சொல்லாமலேயே விட்டுட்டேன்.
உனக்கு வரிசையா நல்ல விஷயங்களெல்லாம் காத்துட்டு இருக்கு.
அதனால இந்த நிலைமையில் தேவை இல்லாத கவலையெல்லாம் இழுத்து விட்டுக்காம உன் பாப்பாவை பத்தியும் அண்ட் கேரியரையும் பிளான் பண்ணு" என்று அவளுக்குப் பதில் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள் மலர்.
அவளது பொறுமையான பதிலைக் கேட்டு வியந்துதான்போனாள் ஜீவிதா.
பிறகு காஃபியை கலந்து எடுத்துக்கொண்டு மாடி தோட்டத்திற்குச் சென்ற மலர் அங்கே இருக்கும் சிறிய அறையில் உள்ள அவளது கீ போர்டை விரல்களால் வருடியவள் அதைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
அதே நேரம் அவளது கைபேசி அழைத்தது.
அதில் செங்கமலம் பாட்டியின் எண்ணை பார்த்தவள் ‘இவங்க ஏன் இப்ப கால் பன்றாங்க?’ என்ற கேள்வி மேலெழ அந்த அழைப்பை ஏற்றாள்.
"ஓய் தேவசேனா நீ இப்ப ஃபிரீயா" என்று பாட்டி தோரணையுடன் கேட்க, "உங்களுக்கு என்ன ராஜமாதா சிவகாமி தேவின்னு நினைப்பா என்னை இப்படி மிரட்டுறீங்க" என்ற அவளுடைய கிண்டலான பதிலில்,
"அட பார்றா இவள நாம சாதாரணமா பேசினதையே மிரட்டுறதா சொன்னால் உண்மையிலேயே மிரட்டினால் என்ன சொல்லுவா" என்று சொல்லி சத்தமாகச் சிரித்த பாட்டி, "அதெல்லாம் இருக்கட்டும் உன்னால நம்ம வீட்டுக்கு வரமுடியுமா? உங்கிட்ட கொஞ்சம் நேரில் பேசணும்; முக்கியமா!" என்றார்.
"ஓகே பாட்டிம்மா நான் கொஞ்ச நேரத்துல கிளம்பி அங்கே வரேன்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் மலர்.
மலர் ஈஸ்வரின் பாட்டி அழைத்ததைச் சூடாமணியிடம் தெரிவிக்க, "லன்ச் சாப்பிட்டுட்டு முதல் வேலையாகப் போய் பாட்டியை பாரு" என்றார் சூடாமணி.
"இல்ல மா; பசிக்கல நான் பாட்டியை பார்த்துட்டு வந்து சாப்பிடுறேன்" என்று சொல்லிவிட்டு எளிய சல்வாரில் கிளம்பி ஈஸ்வரின் வீட்டிற்குச் சென்றாள் மலர்.
அவர்கள் வீட்டிற்குள் மலர் நுழையவும் அந்த நேரத்தில் அவளை அங்கே எதிர்பார்த்திராத சாருமதி முதலில் திகைத்து பின் புன்னகையுடன், "வாம்மா!" என்றார் அவளை வரவேற்கும் விதமாக.
பின்பு வேலை செய்பவரை அழைத்தவர் மலருக்குப் பழரசம் எடுத்துவரச் சொல்ல, "பரவாயில்லை மாமி! இப்ப எதுவும் வேண்டாம்" என்று சொல்லிவிட்டு "பாட்டி எங்க இருக்காங்க?" என்று மலர் கேட்கவும்,
"இப்பதான்மா சாப்பிட்டுட்டு அவங்க ரூமுக்கு போனாங்க" என்று மதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே காலை தாங்கி பிடித்தவாறே அங்கே வந்த பாட்டி அவளது கையைப் பற்றி அழைத்துக்கொண்டு அவரது அறைக்குள் சென்றார்.
அதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார் மதி.
உள்ளே நுழைந்ததும் அவரது கட்டிலில் போய் உட்கார்ந்த பாட்டி அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் மலரை உட்காரச் சொல்லிவிட்டு, "எனக்கு மூட்டுவலி கொஞ்சம் அதிகமா இருக்கு; இல்லேன்னா நானே அங்கே வந்திருப்பேன்" எனக்கூற,
"ஐயோ பாட்டி நீங்க பெரியவங்க என்னை இப்படி உரிமையுடன் நீங்க கூப்பிட்டதுதான் சரி" என்றாள் மலர்.
அதில் புன்னகைத்தவர், "எல்லா சூழ்நிலையும் உனக்கு புரியுதுதான் மலர்; ஆனாலும் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கற?" என்று பாட்டி கேட்க, மறுத்து மலர் ஏதோ சொல்ல வரவும், "நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிடுறேன் பிறகு நீ பேசு" என்று சொல்லி தொடர்ந்தார்.
"என்ன காரணத்துக்காக வேணாலும் நீ உன் முடிவைச் சொல்லாமல் தள்ளிப்போடலாம் ஆனால் என்னை சரோஜாவை மாதிரி வயசானவங்களுக்கெல்லாம் இந்த மாதிரி விஷயத்துல பொறுமை கொஞ்சம் கம்மி.
அதுவும் என்னைப் பொறுத்தவரை அது ரொம்ப ரொம்ப கம்மி; ஏன்னா நாங்க அந்த அளவுக்கு சுபானு அதுதான் ஈஸவரோட ஒட்டிட்டு அவன் கூடவே பிறந்தவ அவ விஷயத்துல கொஞ்சம் அதிகமாவே அடி வாங்கி