19. இதயத் திருடி
வளர்பிறை நிலவு, ஒரு துண்டமாக வானில் ஒளிர்ந்துகொண்டிருக்க, கடற்காற்று இதமாகத் தழுவிச்செல்ல, பால்கனியில் போடப்பட்டிருந்த மூங்கில் கூடை ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் மல்லி.
மனம் முழுதும் கேள்விகளே!
முந்தைய நாள் தொலைக்காட்சிச் செய்தியில், குறிப்பிட்டிருந்த எலும்புக் கூடு யாருடையதாக இருக்கும்?
அந்தக் கொலைகள் எப்பொழுது நடந்ததாக இருக்கும்?
அங்கே, அப்படிப் பட்ட கொலைகளைச் செய்து, புதைக்கும் அளவிற்குச் சென்றது யாராக இருக்கும்?
அது பெண்களுக்கான தனிப்பட்டப் பள்ளிக்கூடம். அதுவும் அங்கே வேலை செய்யும் அனைவருமே, உடற் கல்வி ஆசிரியர் உட்படப் பெண்கள்தான்.
21 Views


