26. செல்வியின் நிலை
“கங்கம்மா கொடுத்த அந்த நோட் புக் அதை அன்னைக்கு நான் கவனிக்கல, மல்லி. ஆனா அது உன் தாத்தாவோடதாதான் இருந்திருக்கணும். அம்மு அத உனக்காகத்தான் விட்டுட்டு வந்திருக்கா. அது தெரியாம அந்த அம்மா அத எங்கிட்ட கொண்டு வந்து கொடுத்துட்டாங்க. கங்கம்மா இப்ப நம்ம ஹோட்டல்லதான் தங்கி இருகாங்க” என்றான் ஆதி. திடுக்கிட்டாள் மல்லி.
“என்ன சொல்றீங்க? அவங்க எப்படி இங்க வந்தாங்க?” என அவள் குழப்பத்துடன் கேட்கவும், “அவங்க இங்க வரல. நான்தான் அவங்களை இங்கே அவங்கள இங்க வரவச்சேன். நான் கங்கம்மாவ இங்க வரவச்சது சில விஷயங்களத் தெளிவா தெரிஞ்சுகதான். செல்வி தவிர மத்தரெண்டு பொண்ணுங்களோட எலும்புக்கூடு கிடைச்சுதே, அதுல ஒருத்தங்க பேரு தனலக்ஷ்மி. இன்னொரு பொண்ணோட பேரு மணிமேகலை” என்று சொல்லிவிட்டு, “இவங்களையெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கெ தட்டான்.
நெற்றியைச் சுருக்கி ஒரு நிமிடம் யோசித்தவள், “ஐயோ! அவங்க எங்க மிஸ் ஆச்சே! தனம் மிஸ்! மேகலா மிஸ்! அவங்க தானா?” என அதிர்ச்சி அடைந்தாள் மல்லி.
“கூல் மல்லி, நான் அம்முவ அங்க இருந்து கூட்டிட்டு வந்ததுக்கு அப்பறம்தான் அதுவும் உடனுக்குடனே இல்லாம அதிக நாள் இடைவெளியில அந்த இரண்டு கொலைகளும் நடந்திருக்கு. போஸ்ட் மார்டெம் செஞ்ச அப்பறம், டீ.என்.ஏ டெஸ்ட் பண்ணை அந்த பொண்ணுங்கதாங்கறத கன்போர்ம் பண்ணி இருக்காங்க. அந்த இரண்டு பொண்ணுங்களுமே அங்கயே அக்கம் பக்கம் இருக்கற கிராமங்கள்ல இலிருந்து அந…


