13. காரணம் புரிந்தது
இந்த திருமணத்தைப் பற்றி தெரியவந்தால், தோழிக்கு அமைந்திருக்கும் நல்ல வாழ்க்கையை நினைத்து அம்மு மகிழ்ச்சிதான் அடைவாள் என்ற எண்ணம் மல்லியின் மனதில் தோன்றவே அதுவரை இருந்த கலக்கம், தயக்கமெல்லாம் அவளை விட்டுப் போயின.
அதன் பிறகு நடந்த சடங்குகளிலெல்லாம், முழுமையான மகிழ்ச்சியுடனேயே ஆதியுடன் தன்னை இணைத்துக்கொண்டாள்.
பெரியவர்கள் அனைவரிடமும் மணமக்கள் ஆசி பெற்று பிறகு அனைத்துத் திருமண சடங்குகளும் இனிதே ஆரத்தியுடன் முடிந்தன.
பிறகு, அவர்கள் வீட்டிலிருக்கும் பூஜை அறையில் விளக்கேற்ற, ஆதியுடன் மல்லியை அழைத்துச் சென்றார் லட்சுமி.
வரதன் ஜெகன் பரிமளா சசி மற்றும் சில நெருக்கமான உறவினர்களும் உடன் சென்றனர்.
பூஜை அறையின் உள்ளே பளபளவென மின்னிய, நன்கு பெரியதாக இருந்த வெண்கலத்தாலான காமாட்சியம்மன் விளக்கு மஞ்சள் குங்குமமிட்டு எண்ணை ஊற்றி தயாராக வைக்கப் பட்டிருந்தது.
16 Views


