top of page

Thirudiya Idhyathai Thirupi Koduthuvidu

Public·5 members

38. மன்னிப்பு (Final)

ஐந்து வருடங்களுக்குப் பிறகு.


“எங்க ஆ காமி ஒரே ஒரு வாய் ப்ளீஸ்! வாய தெற அஜய்!” என மல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள். உணவருந்தும் மேசை மேல் உட்கார்ந்துகொண்டு கண்களில் குறும்பு மின்ன வாயை இறுக மூடியவாறு, ஒரு வாய் உணவு உண்ண அவளைப் படுத்திக்கொண்டிருந்தான் அஜய், ஆதி மல்லி இருவரின் ஐந்து வயது செல்வப் புதல்வன்.


ஆறடி உயறதில் மிடுக்குடன் உள்ளே நுழைந்த தாய்மாமன் தீபனை கண்ட அடுத்த நொடி, கையை மேலே தூக்கிக் காண்பித்து, “ம்மா நான் பெரியவனா வளந்துட்டேன் இல்ல. நானே சாப்பிடறேன் பாருங்க!” என்றவாறு உணவுக் கிண்ணத்தை மல்லியிடமிருந்து பறித்துக்கொண்டு சமர்த்தாக அதை உண்ணத்தொடங்கினான்.


அவனது செய்கையிலேயே வந்திருப்பது யார் என புரியவும் திரும்பிப் பார்க்காமலேயே, “வா தீபா, பிரேக் பாஸ்ட் சாப்பிடுறியா?” என மல்லி கேட்க, வேண்டாம் என்பதுபோல் கையை காண்பித்துவிட்டு அங்கே இருந்த இருக்கையை அஜயின் அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்த தீபன், “அவ்ளோ நல்லவனாடா நீ? சாப்பிட நீ படுத்திட்டு இருந்தத நான் பார்த்துட்டேதான் வந்தேன்? என்னோட அக்காவ தொல்ல பண்ணனு வச்சிக்கோ உனக்கு பெரிய்ய ஊசிதான் பாத்துக்க!” என மருமகனை மிரட்டினான்.


திருதிருவென விழித்தவன், “நான் குட் பாய் மாமா. பாருங்க எல்லா இட்லியும் காலி!” என்று சொல்ல, அவனை வினோதமாக பார்த்தவள், “உலக நடிப்புடா சாமி!” என்று சிரிக்க, அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டான் அஜய். தாய்மாமன் ஊசி என்ற…


37 Views

    Members

    Developed By:  Krishnapriya Narayan 

    © 2019 - 2026 by KPN Publications

    bottom of page