விதைப்பந்து - 1
Updated: Dec 26, 2022

கதைகள்
‘கதைகள்’ இதுதான் இந்த கட்டுரையின் முதல் அத்தியாயம்.
கதை படிப்பது அவசியமா? அது தேவையா? அதனால் என்ன உபயோகம்? நேரம் விரயம் இப்படி நிறைய கருத்துக்களும் கேள்விகளும் நம்மிடையே உலவி வருகின்றன.
முக்கியமாக கதைகள் படிப்பவர்களை பார்த்து நாம் கேட்கிற கேள்விகள் அல்லது நம்மை நோக்கி வர கேள்விகள் அலட்சிய பார்வைகள் நிறைய!
‘இதெல்லாம் படிக்கிற நேத்துல் பாட புத்தகத்தை படிச்சா நீ உருபுடுவ? இதெல்லாம் ஒரு டைம் பாஸா? இந்த மாதிரி கதை படிச்சு நீ என்ன கிழிக்க போற?
இப்படி பல பெற்றோர்கள், நண்பர்கள் நம்மை நோக்கி கேட்க கூடும். அதற்கான பதில்களை தேடிய ஒரு சிறிய பயணம் இது.
ஆனால் ஒன்று. கதைகள் பற்றிய விரிவான அலசல் அல்ல இது. கதைகள் என்ற தலைப்பை மையமாக கொண்டு இலக்கை நோக்கி எய்யப்படும் அம்பு போல அவற்றின் முக்கிய மைய கருத்தை மட்டுமே விளக்குகிறது. அது குறித்து இன்னும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்கள் அவற்றை குறித்த உங்கள் தேடலை நீங்களே விரிவாக்கம் செய்யலாம்.
இங்கே விதைபந்து தூவ மட்டுமே படுகிறது, அது துளிர் விட்டு வளர்வதும் மண்ணோடு மட்கி போவதும் அந்த மண்ணின் (மனதின்) வளமையை பொருத்தது.
சரி… வாருங்கள்… விதைப்போம்…
விதைப்பந்து – 1
கதைகள்
கதைகள் – அதுதான் நம்முடைய நற்சிந்தனைகளுக்கான ஆதி விதைகள்!
ஆம்! அந்த ஆதி விதைகள்தான் இந்த இணைய காலகட்டத்திலும் நம் எல்லோரையும் ஒன்றிணைத்து இணைப்போடும் உயிர்போடும் வைத்திருக்கும் ஒரு முக்கிய கருவியும் கூட!
இந்த கதைகள் என்ற ஒன்று எங்கே எப்போது மனித பயணத்தோடு இணைந்தது என என்றாவது நாம் கணக்கிட்டு பார்த்தது உண்டா? அப்படி யோசித்தோமேயானால் நமக்கு மலைப்புகள்தான் மிச்சமாக இருக்கும்.
இந்த கதை என்ற கருவியை வைத்துதான் மனிதன் தன் சிந்தனைகளை, வாழ்வியலை, சடங்குகளை என்று எல்லாவற்றையும் அடுத்த சந்ததிக்கு கடத்தியிருக்கிறான்.
காரண காரியமே தெரியாமல் இன்றும் நாம் பின்பற்றி கொண்டிருக்கும் பல சடங்குகளுக்கு பின்னணியில் நிறைய நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற கதைகள் உண்டு. அதன் பின்னணியில் ஆழமான ஆன்மிகம் சார்ந்த பல அறிவியல் கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன. இதெல்லாம் தெரிந்த விஷயங்கள்தானே என்று தோன்றலாம். ஆனால் இந்த விஷயங்களின் ஆணிவேராக நம் முன்னோர்கள் பயன்படுத்திய கருவி எது என்ற கேட்டால் அதுதான் கதைகள்.
பல நூற்றாண்டுளான நூற்றாண்டுகள் தாண்டிய கால இடைவெள