விதை🌱பந்து!(கட்டுரைத் தொடர்)
முன்னுரை

விதைப்பந்து என்பது விதைகளோடு கலந்து மண் மற்றும் உரங்கள் சேர்க்கபட்ட ஒரு களிமண் உருண்டை.
இந்த உருண்டைகள் நிலங்களில் வீசப்படுகிறது. ஒரு பெரும் விருட்சமாகும் என்ற நம்பிகையோடு!
அதே நம்பிக்கைதான் இந்த விதைப்பந்து கட்டுரையின் பிரதான நோக்கமும் கூட.
அந்த நம்பிக்கை மண் மீது கொண்ட நம்பிக்கை. எங்கள் நம்பிக்கை மனங்களின் மீது கொண்ட நம்பிக்கை!
பூமியின் மீது நாம் வீசும் குப்பைகளும் கழிவுகளும் மண்ணோடு மண்ணாக மட்கிவிட, விதைகள் மட்டும் அவ்விதம் மட்கிவிடுவதில்லை.
அவைகள் வேர் விட்டு வளர்ந்து விருட்சங்களாக மாறுகின்றன.
விந்தையான இந்த செயல்தான் நம் பூமியை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
அதே போல மனித மனங்களை உயிர்ப்போடு வைத்திருக்க முனையும் ஒரு சிறு முயற்சியாகவே இந்த விதைப்பந்து கட்டுரை!
அப்படி மனித மனங்களை உயிர்ப்போடு வைத்திருப்பதும், மனித சிந்தனைகளை மட்கிபோகவிடாமல் அதனை மேம்படுத்தி கொண்டிருப்பதும் எது என்று கேட்டால் அன்றும் இன்றும் என்றும் அது புத்தக வாசிப்பு மட்டும்தான்.
அதுவும் இன்றைய காலகட்டத்தில் வேகம் வேகம் என்று அதிவேகமாக நம் பார்வைக்கே தென்படாத ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு இரவு பகல் பேதம் கூட இல்லாமல் போய்விட்டது.
சூரியனின் ஒளியை கூட மிஞ்சும் மின