top of page

கூந்தல்


கூந்தல்.


முடி கொட்டுவது சாதாரண பிரச்சினை இல்லை என்று தொடங்கி கூந்தல் தொடர்பான எந்த விளம்பரம் பார்க்க நேரிட்டாலும் டென்ஷன்தான் ஸ்வேதாவிற்கு.


விவரம் புரிந்த நாள்தொட்டு தன் கூந்தல் பற்றி ஒரு பெருமை உண்டு அவளுக்கு. முப்பது வயது தொடங்கி கிட்டத்தட்ட ஐந்தாறு வருடமாக அந்த பெருமை மாறி அவள் கூந்தல் அவளுக்கு பெரும் தலைவேதனையாகப் போனதுதான் உண்மை.


பள்ளிகாலம் தொட்டு "வாவ் ஸ்வேதா! என்ன ஹேர்பா உனக்கு" எனும் தோழிகளாகட்டும் திருமண விழாக்களுக்கு செல்லும் பொழுது, "ஹேய்! இது நிஜ முடியா இல்ல சவுரியா?” என பின்பனலை இழுத்து டென்ஷன் ஏற்றும் மாமிகளாகட்டும் தப்பித்தவறி தலை முடியை விரித்து விட்டால், "ஸ்வேதாம்மா! தலைமுடிய முதல்ல கட்டு. யார் கண்ணாவது படபோரது” என அங்கலாய்கும் சரோஜா பாட்டியாகட்டும் அனைத்திற்கும் மேலே திருமணத்திற்கு முன், "உன் ஹேர் ரொம்ம்ம்...ப நீநீ...ளமா இருக்குமாமே.. அப்படியா?” என்று கேட்ட அவளுடைய ஹரியாகட்டும் அந்த பெருமையை வளர்த்துதான் விட்டார்கள்.


முதலில் அபி பிறந்த பிறகு லேசாக உதிரத் தொடங்கியது பின் சாரா பிறந்த பிறகு தாறுமாறாக கொட்டோ கொட்டென்று கொட்டியது (எது முடிதாங்க).


அதுவும் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டே அவளின் கூந்தலுடன்தான். அதுவும் கொத்தாகப் பற்றி நன்றாக இழுத்து வலியில் ஆஆ... வெனக் கத்தினால், அதுவும் ஓர் விளையாட்டு என நினைத்து இன்னும் நன்றாக இழுக்க... விடுவிப்பதற்குள் கண்ணீரே வந்துவிடும்.


பிறகுதான் தொடங்கியது அனைவரின் அனுதாபப் படலம். ‘ஐயோ ஸ்வேத் என்ன உன் ஹேர் இப்படி ஆயிடுச்சு?’ எனும் தோழிகளின் நலம் விசாரிப்பில், ‘எங்க ஸ்வேதாக்கு தலைபின்னா முடி கை கொள்ளாது. இப்ப இப்படி கொட்டி போச்சே’ என்கிற பாட்டியின் புலம்பலில், சமயத்தில் சாப்பாட்டில் மாட்டி ஹரியிடம் மாட்டிவிட்டு வாங்கும் முறைப்பில், அனைத்திற்கும் மேலாக முகநூலில் கவனிக்காமல் முன்னால் போட்ட பின்னலுடன் பதிவிட்ட போட்டோவிற்கு, ‘ஐயோ ஸ்வேதா! உன் ஹேர்ர்ர்..’ என அதிர்ச்சி முகம் காண்பிக்கும் இமோஜியுடன் மாமாவின் மகள் மதியற்ற மதியின் கமென்டில், இவளது இமேஜ் பயங்கரமாக டேமஜ் ஆகி விட...


‘தானே வளர்ந்த முடி தாலிச்சரட்டோட! தாயார் தைலம் தடவி வளர்த்தது வாளிக்காதோட!’ எனும் பழமொழிக்கேற்ப பிறகுதான் தொடங்கியது அவளது தலைமுடி வளர்க்கும் (உள்ளதையும் கெடுக்கும்) போராட்டம்.


விளம்பரங்களில் வரும் அனைத்து ஷேம்பூக்கள், ஹேர் ஆயில்கள், அந்த தைலம் இந்த தைலம், ஹாட் ஆயில் மசாஜ் (வேற ஒண்ணும் இல்லைங்க அம்மா பாட்டியெல்லாம் செய்வதுதான். எண்ணையை காச்சி தேய்ப்பது) ஹேர்ஸ்பா(ஹப்பாஆஆ..) அனைத்தையும் முயற்சி செய்து, அடர்த்தி குறைந்து மெலிதாக நீண்ட முடியை பார்க்கவே பிடிக்காமல், செய்துகொண்ட யூ கட் பிறகு லேயர் கட் பிளா பிளா பிளா.


கடைசியாக மருத்துவர் ஆலோசனை படி எடுத்துக்கொண்ட மாத்திரை அதனால் ஏற்பட்ட வயிற்றில் எரிச்சல். போதும் போதும் என அனைத்தையும் விட்டு ஆறு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் கவலை மட்டும் தீர்ந்தபாடில்லை.


இப்படியிருக்க அவளது தங்கை நீலா அவளை போனில் அழைத்தாள். ஆனால் அவள் கூரிய செய்தி ஸ்வேதாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


அது, அவர்களுடைய தோழி அகிலா பற்றியது.


ஸ்வேதாவின் குடும்பமும் அகிலாவின் குடும்பமும் ஒரே காலனியில் பக்கத்துப் பக்கத்து வீட்டில் குடியிருந்தனர்.


தன் தங்கையை விடவே சிறியவளான அகிலாவை ஸ்வேதாவிற்கு மிகவும் பிடிக்கும்.


மிகவம் இனிமையான பெண் அவள். திருமணமாகி அவளும் நீலா இருக்கும் பகுதியில்தான் தன் கணவர் ராஜன் மற்றும் ஐந்து வயது மகனுடன் குடியிரு