top of page

Padithen Pagirnthen

Public·2 members

நந்தலாலாவின் எல்லா வானமும் நீலம் - சிறுகதை தொகுப்பு.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன.


ஒவ்வொரு கதையுமே படிக்க சுவாரசியமாக இருக்கிறது.


பேருந்து பயணங்களில் நாம் சந்திக்கும் எதார்த்த மனிதர்களைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நம்ம ஆத்தர். நல்ல தெளிவான எழுத்து நடை. சில கதைகள் சிரிக்க வைக்கின்றன. சில, மனதைக் கனக்கச் செய்கின்றன.


சாம்பிளுக்கு, முதல் கதை 'பாதை'யில் “ அப்ப விடு. நான் உன் மவன் வீட்டுப் பக்கம் தான் வண்டி ஓட்டுறேன். நீ பஸ்ல என்னைப் பார்த்தா ஏறிக்க என்ன?” என எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பெண்மணியிடம் பேருந்து ஓட்டுனர் சொல்லும் இடம் அழகு.


6 வது கதையான வெட்டிக் காதலில் “ அய்யோ! இதுலாம் குழந்தை பார்க்கக் கூடாதே?” எனப் பதறியவாறு சந்தனத் தலையும், வைரக் கம்மலுமாக இருந்த மகளை நெஞ்சோடு அனைத்துக் கொண்டு விறுவிறுவென நடந்தாள் திருமதி மஞ்சு. எனும் இடத்தில் காதலின் எதார்த்தத்தைப் போகிற போக்கில் சொல்லிவிட்டார்.


ஒவ்வொரு கதையிலும் இதுபோல ஒரு பகுதி நம்மை நெகிழ வைக்கிறது.


78 Views
nanthalala2021
Jun 21, 2024

Thank you so much akka 😍

Hi Friends!

வணக்கம் அன்பு வாசகத் தோழமைகளே!

கதை, கட்டுரை, புனைவு, அபுனைவு படைப்புகளில் நான் படித்ததில் எனக்கு பிடித்தவற்றைப் பற்றி இங்கே பகிரவிருக்கிறேன்.

நீங்களும் கூட உங்களுக்குப் பிடித்த வித்தியாசமான படைப்புகளைப் பற்றிய உங்கள் விமரிசனங்களை, தள வேறுபாடு இல்லாமல் இங்கே பகிரலாம்.


21 Views

    Developed By:  Krishnapriya Narayan 

    © 2019 - 2024 by KPN Publications

    bottom of page