



KPN கட்டுரைகள்
ஆடையா? அறியாமையா? எது சிக்கல்?
//நாகரிகம் மாறுவதற்கு முன்பு பள்ளிக்கோ கல்லூரிக்கோ இப்படிப் போன போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை… இது வரலாறு//
எந்த மகான் சொன்னது இது?
என்னிடமும் ஒரு வரலாறு இருக்கிறது. 1990களில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த ஒரு அவலம் அது!
நடந்தது எதோ ஒரு அத்துவான காட்டிலெல்லாம் இல்லை! நான் வசித்த, சென்னை மாநகரின் மிக முக்கியப் பகுதியான மாம்பலத்தில்தான். கோதண்டராமர் கோயில் தெரு… அங்கேதான் நான் படித்த பள்ளி இருக்கிறது (இன்று வரை அங்கே பெண்களுக்கு பாவாடை தாவணிதான் பள்ளிச் சீருடை). நான் படித்த பள்ளிக்கு மட்டுமில்லை, அங்கே இருக்கும் பல பள்ளிகளில் படித்த மாணவிகளும் அந்த வீதியைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அன்றைய காலகட்டத்தில்,பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலுமே பாவாடை தாவணிதான் சீருடையாக இருந்தது.
அங்கே, எல்லை அம்மன் கோவில் தெரு, ஜோதி ராமலிங்கம் தெரு போன்ற பகுதிகளில் வசிப்பவர்களெல்லாம் அரங்கப்ப ரெட்டித் தெருவில் இருக்கும் ‘ட’ வடிவ குறுக்கு சந்தை உபயோகிப்பது வழக்கம் (பிரபல சித்தி தொடர் அந்த வீதியில்தான் படமாக்கப்பட்டது). எல்லோருமே கும்பலாக பேசிக்கொண்டே அந்த சந்தைப் பயன்படுத்தி வந்து செல்வதுதான் வழக்கம். அவர்கள் மட்டுமல்ல, மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன், தி.நகர் பஸ் ஸ்டான்டில் வந்து இறங்குபவர்களும் இந்த வழியாகத்தான் நடந்து வருவார்கள்.
குழந்தைகளை இயல்பாக வாழவிடுவோம்!
ஏதாவது ஒரு பாடல் அல்லது ஒரு டயலாக் ட்ரெண்டிங்கில் வந்துவிட்டால் இங்கே பலரும் இந்த ஷார்ட்ஸ், ரீல்ஸ் போன்றவற்றில் அதைத் தாங்களும் முயற்சி செய்து அப்லோட் செய்துவிடுகிறார்கள். சிறு குழந்தைகள் முதல் வயதானவர் வரை வயது பேதம் இன்றி எல்லாருமே இதில் அடக்கம். இவ்வாறாக ‘ட்ரெண்டிங்’ என்கிற பெயரில் சமூக வலைத்தளங்களில் ஒரு கூட்டமே சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இவற்றில் சில ரசிக்கும் படியாகவும் சில முகம் சுளிக்கும் படியாகவும் இருக்கும். ஒரு சில காணொளிகள் எரிச்சல் படுத்தவும் செய்கின்றன.
அதுபோல சமீபமாகச் சின்ன சின்ன பிள்ளைகள் செய்யும் டான்ஸ் ரீல்ஸ் \ ஷார்ட் வீடியோஸ் என்னை அதிகம் எரிச்சலும் கோபமும் கொள்ள வைக்கிறது. லைக்ஸ், கமெண்ட்ஸ், மானிட்டைசேஷன் மூலம் வரக்கூடிய வருமானம் போன்ற ஏதோ ஒன்றுக்காக, இதுதான் என்று ஒரு வரைமுறையே இல்லாமல் இது போய்க்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஒரு பிரபல திரைப்படத்தின் ‘சாங்’குக்காக அந்தப் பாட்டில் நடித்திருக்கும் நடிகை அணிந்திருப்பது போலவே உடை அணிந்து, அதே போலவே சிகை அலங்காரம் மற்றும் முக ஒப்பனையுடன் அப்பட்டமாக அலுக்கிக் குலுக்கும் அதே நடன அசைவுகளுடன் நடனமாடியிருக்கும், ஓர் ஏழு எட்டு வயதில் உள்ள பெண் குழந்தையின் ஷார்ட் வீடியோ ஒன்று திரும்பத் திரும்ப நேற்று முதல் என் கண்களில் பட்டுக்கொண்டே இருந்தது. உண்மையில் அது என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. உரிய வயதிலிருக்கும் ஒருவர் இதை செய்யும் பொழுது இதுபற்றி கருத்துச்…
மகளிர் உரிமைத் தொகை…
July 11 2023 ஹெர் ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரை
மகளிர் உரிமைத் தொகை…
தமிழ்நாடு அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பு நல்ல முறையில் வெற்றி பெற்றால் அது நம் பெண் சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய நீதி என்று சொல்ல வேண்டும்.
இது சம்பந்தப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவில், ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா, அவங்க பையன் லட்சத்துல சம்பாதிக்கிறான். ஆனா, இந்த அம்மா தான் ஒருத்தருக்காக மட்டும் தனி ரேஷன் கார்டு வச்சிருக்காங்க. இந்த ஆயிரம் ரூபாயை வாங்குறதுல அவங்க குறியா இருக்காங்க’ என்று அவரைச் சிறுமைப்படுத்தி ஒரு பின்னூட்டத்தைப் பார்த்தேன்.
இது போன்ற மனநிலையை எண்ணி மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது.
அரசாங்கம் இந்தத் தொகையை ஒரு பெண்ணுக்கு கொடுக்க நிறைய நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதுவும் நியாயமானதே. அதன்படி பார்க்கும்போது எந்தவித வருமானத்திற்கும் வழி இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு இந்தத் தொகை கட்டாயம் சேரும் என்பது புரிகிறது.
